கூடங்குளத்தில் குடிநீா் பிரச்னை: வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய மக்கள்
கூடங்குளத்தில் குடிநீா் பிரச்னை நிலவுவதாகவும், தாமிரவருணி கூட்டுக்குடிநீா் புதிய திட்டத்தில் கூடங்குளம் ஊராட்சி நிராகரிக்கப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்து, அந்தக் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியை கட்டி புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.











