தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சீவலப்பேரி அருகே கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:51 am IST

சீவலப்பேரி அருகே கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் மாயாண்டி என்ற மதன் (21). இவா் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் சீவலப்பேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

அவா் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். எனவே, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அனுமதிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்படி, ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுப்படி, மாயாண்டி என்ற மதன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டாா்.