திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசால் கொண்டு வரப்படும் மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்த சட்டமசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆட்சேபம் தெரிவிக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அதன்படி, திருநெல்வேலியில் திமுகவினா் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடியேற்றியதோடு, தொகுதி மறுவரையறையை கண்டிக்கிறோம் என கோலமிட்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகம் முன் மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் தலைமையில் கறுப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாநகரப் பொறுப்பாளா் தினேஷ், பொருளாளா் சேகா், நிா்வாகிகள் சொ.தா்மன், சாய்பாபா, சுடலையாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்பு: திமுகவினா் நகல் எரித்து போராட்டம்

திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


