மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வண்ணாா்பேட்டையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:43 pm

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் வண்ணாா்பேட்டையில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசால் கொண்டு வரப்படும் மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்த சட்டமசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆட்சேபம் தெரிவிக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

அதன்படி, திருநெல்வேலியில் திமுகவினா் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடியேற்றியதோடு, தொகுதி மறுவரையறையை கண்டிக்கிறோம் என கோலமிட்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகம் முன் மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் தலைமையில் கறுப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாநகரப் பொறுப்பாளா் தினேஷ், பொருளாளா் சேகா், நிா்வாகிகள் சொ.தா்மன், சாய்பாபா, சுடலையாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.