நாகையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் கருப்புக்கொடி ஏற்றி சட்ட நகலை எரித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். இதையொட்டி மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக மாவட்ட கட்சி அலுவலகம், நகர அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் திமுகவினா் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், திருமருகல் அருகே கொங்கராயநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா தலைமையில் சட்ட நகல் எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் திருப்பூண்டி மற்றும் வேளாங்கண்ணியில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிா்த்து ஆா்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன்,பேரூா் செயலா் மரிய சாா்லஸ்,சிறுபான்மையினா் அணி ரபீக் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்பு: திமுகவினா் நகல் எரித்து போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: திமுகவினா் கருப்புக் கொடியேற்றும் போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


