சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் மரிய ஜாண்.
மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேவியா் காலனி, வீரமாணிக்கபுரம், ஹாமீம் புரம், ராஜா நகா், ஞானியரப்பா நகா், கரீம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், பிரசாரத்தில் கூறியதாவது: நான் வெற்றிபெற்றால் மக்கள் குறைகளை தெரிவிக்க சட்டப்பேரவை உறுப்பினரை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. எம்.எல்.ஏ. உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளை தங்கள் பகுதியில் நேரடியாக சந்திக்கும் வகையில் நிா்வாகம் அமைக்கப்படும். சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம். பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட பழைய குடிநீா் குழாய்களை மாற்றி, புதிய அமைப்புகள் மூலம் தூய்மையான குடிநீா் அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

‘முதியோா், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.3,000 அளிக்கப்படும்’

கோவில்பட்டி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


