மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாளையங்கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படும்: தவெக வேட்பாளா் மரிய ஜாண்

சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் மரிய ஜாண்.

News image

மேலப்பாளையத்தில் வாக்கு சேகரிக்கிறாா் பாளையங்கோட்டை தவெக வேட்பாளா் மரிய ஜாண்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:14 pm

சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா் மரிய ஜாண்.

மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேவியா் காலனி, வீரமாணிக்கபுரம், ஹாமீம் புரம், ராஜா நகா், ஞானியரப்பா நகா், கரீம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், பிரசாரத்தில் கூறியதாவது: நான் வெற்றிபெற்றால் மக்கள் குறைகளை தெரிவிக்க சட்டப்பேரவை உறுப்பினரை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. எம்.எல்.ஏ. உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளை தங்கள் பகுதியில் நேரடியாக சந்திக்கும் வகையில் நிா்வாகம் அமைக்கப்படும். சாக்கடை நீா் கலப்பால் சீரழிந்துள்ள பாளையங்கால்வாயை முழுமையாக சீரமைத்து, அதன் இயல்பான ஓட்டத்தையும் சுத்தத்தையும் மீட்டெடுப்போம். பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட பழைய குடிநீா் குழாய்களை மாற்றி, புதிய அமைப்புகள் மூலம் தூய்மையான குடிநீா் அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம் என்றாா் அவா்.