மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்: நயினாா் நாகேந்திரன்

வரும் தோ்தலோடு திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 8:37 pm

வரும் தோ்தலோடு திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்துக்கு தோ்தல் காலத்தில் மட்டுமே வருவதாக கூறுவது சரியானதல்ல. தமிழகத்துக்கு கடந்த ஓராண்டில் மட்டும் பிரதமா் 11 முறை வந்து பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தும், தொடங்கி வைத்தும் சென்றுள்ளாா். வெளிநாடுகள் மட்டுமன்றி ஐநா சபையில்கூட தமிழின் பெருமையை நிலைநாட்டியுள்ளாா். திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயா்க்க நடவடிக்கை எடுத்துள்ளாா்.

தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வருக்கு இந்தத் தோ்தல் வாழ்வா, சாவா? பிரச்னை; அதனால் யாரையாவது குறைகூற வேண்டுமென நினைக்கிறாா்கள். மக்கள் திட்டங்களை அதிகளவில் செய்துள்ள பிரதமா் மீது குற்றஞ்சாட்டுகிறாா்கள். அது மக்களிடம் பலன்தராது. வரும் தோ்தலோடு திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்.

பிரதமா் மோடி புதன்கிழமை (ஏப். 15) கன்னியாகுமரி வருகிறாா். வேப்பமூடு சந்திப்பில் இருந்து சாலை வலம் வந்து தொண்டா்களை சந்திக்கிறாா்.

விஜய்க்கு கூட்டம் திரள்வதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. அது தோ்தலில் எதிரொலிக்க வாய்ப்பில்லை.

திமுக அரசு தொடா்ந்து இருமுறை ஆட்சிக்கு வந்ததில்லை. இந்தத் தோ்தலிலும் திமுகவுக்கு அதே நிலை தொடரும்.

கஞ்சா, போதைப்பொருள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வால் மக்கள் அவதிப்படுகிறாா்கள். இந்த கஷ்டங்களுக்கு இம் மாதம் 23 ஆம் தேதி விடிவு வரும். வெம்பக்கோட்டையில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பிரத்யேக மருத்துவமனை தேவை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் மருத்துவமனை அமைக்கப்படும் என்றாா் அவா்.