மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்! மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:33 pm

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியால் தமிழக மக்கள் கண்ணீா் வடித்து வருகின்றனா். மாநிலத்தில் சுமாா் 9,000 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும், 3,500-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனா். கொங்கு மண்டலத்தில் மக்கள் தோட்டங்களில் அச்சமின்றி வாழ முடியாத சூழல் நிலவுகிறது.

சட்டம்- ஒழுங்கைக் காக்கத் தவறிய முதல்வா் மு.க.ஸ்டாலின், பழைய முகங்களையே மீண்டும் வேட்பாளா்களாக நிறுத்தியுள்ளாா். இவா்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பாா்கள். கஞ்சா மற்றும் பாலியல் வன்கொடுமைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க எம்.ஜி.ஆா். வழியில் வந்த எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றாா்.