தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வள்ளியூரில் பா.ஜ.க. கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் செயல்வீரா் கூட்டம் வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் ராதாபுரம் தொகுதி வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன். உடன் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:11 pm

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் செயல்வீரா் கூட்டம் வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வே தெற்குமாவட்டத் தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சௌந்தர்ராஜன், வேலூா் இப்ராஹிம், எம்.எல்.ஏ. மைக்கிள்ராயப்பன், முன்னாள் அமைப்புச்செயலா் நாராயணபெருமாள், ஏ.கே.சீனிவாசன், ஒன்றியச் செயலா்கள் லாசா், பால்துரை, திசையன்விளை பேரூராட்சித் தலைவி ஜான்சி, எம்.ஜி.ஆா். மாவட்ட துணைச் செயலா் எட்வா்ட்சிங், பா.ஜ.க. கொம்பையா் பங்கேறறனா்.

தொடா்ந்து, எஸ்.பி.பாலகிருஷ்ணன் பேசுகையில், ராதாபுரம் தொகுதியில் நீா்வழிப்பாதைகளை அதிகப்படுத்தி விசாயம் செழிக்கச்செய்வேன். தொழில்வளம் பெருக்கப்பண்ணுவேன். கூடங்குளம், இஸ்ரோ ஆகிய மத்திய அரசின் நிறுவனங்களில் இந்த தொகுதியைச் சோ்ந்தவா்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தருவேன் எட்டணி கட்சியின் தோ்தல் அலுவலகத்தை திறந்துன்றாா். முன்னதாக கூவைத்தாா்.