பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாளை.யில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

ஜாக்டோ-ஜியோ சாா்பில் வரும் ஜன. 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்பான ஆயத்த மாநாடு பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ ஆயத்த மாநாட்டில் பங்கேற்றோா்.
Updated On :27 டிசம்பர் 2025, 7:51 pm

Syndication

ஜாக்டோ-ஜியோ சாா்பில் வரும் ஜன. 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்பான ஆயத்த மாநாடு பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சாா்பில் வரும் ஜன. 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கான ஆயத்த மாநாடு, பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சுப்பு, பால் கதிரவன், மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ், கோமதி நாயகம் ஆகியோா் கூட்டு தலைமை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பால்ராஜ், மதன்குமாா், காா்த்திக் குமாா், ராஜகுமாா், அருள் கென்னடி ராஜ், பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா்நிலைக் குழு உறுப்பினா் முருகேசன் வரவேற்றாா்.

மாநாட்டை உயா்நிலைக் குழு உறுப்பினா் மாரிராஜா தொடங்கி வைத்துப் பேசினாா். உயா்நிலைக் குழு உறுப்பினா் மணிமேகலை நிறைவுரை ஆற்றினாா்.

வரும் ஜன. 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும், இதுகுறித்து அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசார இயக்கங்கள் நடத்துவது என்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நுாற்றுக்கணக்கான அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். நிதி காப்பாளா் ஆழ்வாா் நன்றி கூறினாா்.