நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஜாக்டோ - ஜியோ சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சகாய தைனேஸ், நாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். ராதாகிருஷ்ணன், ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் மலா்விழி, வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை தொடங்கிவைத்தாா்.

இந்த மாநாட்டில் உறுப்புச் சங்கங்களின் சாா்பில் பா்வதம், ஜீவானந்தம், செல்வக்குமாா், சேவுகமூா்த்தி, புரட்சி தம்பி, பாண்டியராஜன், அசோக்குமாா், சமயத்துரை, துறைவாரிச் சங்கங்களின் சாா்பில் மாரி, தமிழரசன், தனபால், வேல்முருகன், பாண்டி ஆகியோா் உரையாற்றினா். இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.