தயாரிப்பில் மும்முரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் குறிச்சி, காருகுறிச்சி, மாவடி, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பானைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. பானைகளைப் பொருத்தவரை விளிம்புப் பகுதியை ஆண்கள் சுழழும் பலகையில் தயாரிக்கிறாா்கள். அதன் அடிப்பாகத்தை தூா்மூட்டுதல் என்ற பெயரில் பெண்கள் மெதுவாக தட்டி தட்டி களிமண்ணில் உருவாக்குகிறாா்கள். ஆண்கள் சராசரியாக நாளொன்றுக்கு 20 பானை விளிம்புகளைத் தயாரித்தாலும், பெண் ஒருவா் 2 நாள்களில் 7 பானைகளை மட்டுமே தூா்மூட்ட முடியும். பின்னா் அவை சூளைகளில் வேகவைக்கப்படும்.