ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பண்பொழி திருமலைக்கோவிலில் தேரோட்டம்:ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இக்கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த  நேற்றுவெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.அன்றைய தினம் மலைக்கோவிலிலிருந்து,பண்பொழிக்கு சிறப்பு அலங்காரத்துடன் குமரனை வழி அனுப்பும் வைபவமும்,மாலையில் பண்பொழி ஐந்துபுளி மண்டபத்தில் சுவாமி உபசார அழைப்பு வைபவமும் நடைபெற்றது.தொடர்ந்து விழாவின் முக்கிய

News image
Updated On :26 ஜனவரி 2013, 1:15 pm

கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த  நேற்றுவெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.அன்றைய தினம் மலைக்கோவிலிலிருந்து,பண்பொழிக்கு சிறப்பு அலங்காரத்துடன் குமரனை வழி அனுப்பும் வைபவமும்,மாலையில் பண்பொழி ஐந்துபுளி மண்டபத்தில் சுவாமி உபசார அழைப்பு வைபவமும் நடைபெற்றது.தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சமான அன்னக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஜன.19-ம் தேதி காலையில் சுவாமி வெள்ளிச்சப்பரத்தில் வீதியுலாவும்,இரவில் கலைமான் வாகன உலாவும்,20-ம் தேதி காலை வெள்ளிச்சப்பர வீதியுலாவும்,இரவில் கோரத வீதியுலாவும், 21-ம் தேதி காலை சிம்ம வாகன வீதியுலாவும்,இரவில் ஆட்டுகிடா வாகனத்தில் வீதியுலாவும், 22-ம் தேதி காலையில் சட்டத்தேரில் வீதியுலாவும்,இரவில் வெள்ளிமயில் வாகனத்தில் வீதியுலாவும், 23-ம் தேதி காலையில் வெள்ளிச்சப்பரத்தில் வீதியுலாவும்,ஜன.24-ம் தேதி காலையில் கோரதத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

அன்று காலை ஐந்துபுளி மண்டபத்தில் சண்முகர் அழைப்பு உபசாரமும்,பிற்பகல் முருகன்-சண்முகர் எதிர்சேவையும் இரவில் இரட்டைச்சப்பரத்தில் வீதியுலாவும், 25-ம் தேதி காலையில் வெள்ளைச்சாத்தி வைபவமும்,மதியம் பச்சை சாத்தி வைபவமும்,இரவில் கைலாச பர்வதத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.