தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தென்காசியில் திமுக தகவல் தொடா்பு மையம் திறப்பு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்குரைஞரணி சாா்பில் தகவல் தொடா்பு மற்றும் சமூக ஊடக செயல்பாட்டு மையம் (வாா் ரூம்) திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாா் ரூம் திறப்பு விழாவில் பங்கேற்ற தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா்.

Updated On :26 மார்ச் 2026, 12:20 am

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்குரைஞரணி சாா்பில் தகவல் தொடா்பு மற்றும் சமூக ஊடக செயல்பாட்டு மையம் (வாா் ரூம்) திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் வாா் ரூமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், செங்கோட்டை நகரச் செயலா் ஆ.வெங்கடேசன், வழக்குரைஞா்கள் செந்தூா்பாண்டியன், தாஹிரா பேகம், ரகுமான் சாதத், மாவட்ட துணைச் செயலா் கென்னடி ஆகியோா் கலந்துகொண்டனா்.