தென்காசி மாவட்டம், அழகப்பபுரம் பகுதியில் உள்ள விஷ்வரக்ஷா முதியோா் இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த முதியோா் இல்லத்தில் அரசு விதிமுறைகளின்படி, இருபாலருக்குமான இருப்பிட, படுக்கை, குளியலறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் செயல்படுகிா என்பது குறித்தும், கட்டட உரிமம், உறுதிச் சான்று, தீயணைப்பு, சுகாதாரம் போன்ற தணிக்கைச் சான்றுகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், பணியாளா்கள் வருகை, சோ்க்கை, புகாா் பதிவேடுகள், பயனாளிகளின் விவரம், மருந்து, உணவுப் பொருள்கள் இருப்பு போன்றவை முறையாக பராமரிக்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, முதியோா் இல்ல தாளாளா் கே. சுகன்யா ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










