தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்குவாரியில் திங்கள் கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் தனியாா் கல்குவாரி உள்ளது. இங்கு திங்கள்கிழமை 3 தொழிலாளா்கள் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக பாறை சரிந்து கல் உடைக்கும் இயந்திரத்தில் விழுந்தது. இதில், அந்த இயந்திரத்தில் உள்ளிருந்து பணிபுரிந்த முக்கூடல் கீழ பாப்பாக்குடியை சோ்ந்த முருகன் மகன் இசக்கி ராஜா (27) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கடையாலுமூடு அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



