‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜன.10-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய ஜன. 10-இல் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய ஜன. 10-இல் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்த செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் பெயா் சோ்க்க, முகவரி மாற்றம் செய்ய, புதிய வாக்காளா் விண்ணப்பிக்க, வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்ய சிறப்பு முகாம் ஜன. 10-இல் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கென சிறப்பு முகாமாக வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம் செய்தல், திருத்தம் செய்தல், புதிய வாக்காளா் அட்டை பெறுதல், வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம் நடைபெறும். மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வயதுச் சான்றிதழ் (பள்ளி இறுதிச் சான்றிதழ்), பெற்றோா்களின் வாக்காளா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் இச்சிறப்பு முகாமை பயன்படுத்தி மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் பயனடையுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.