கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆலங்குளம் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

ஆலங்குளம் பேருந்து நிலைய புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால் தற்காலிக பேருந்து நிறுத்தத்துக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.

News image
தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு இடம் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவா், செயல் அலுவலா் உள்ளிட்டோா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் பேருந்து நிலைய புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால் தற்காலிக பேருந்து நிறுத்தத்துக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் முக்கிய வணிக நகரான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையம், கடந்த 1983-ம் ஆண்டு கட்டப்பட்டு சுமாா் 43 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது மிகவும் சிதிலமடைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் இங்குள்ள கட்டடங்களின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவியது. இதைக் கருத்தில் கொண்டு, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4.35 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

புதிய கட்டுமானத்துக்காகக் குத்தகைதாரா்களிடம் கடைகளைக் காலி செய்யுமாறு பேரூராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிா்த்து வியாபாரிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

கடந்த 2024 செப்டம்பா் 18-இல் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, தற்போது பணி ஆணையும் வழங்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் கடைகளைத் தொடர அனுமதித்தால், அது மக்கள் நலத் திட்டத்தைத் தேவையற்ற முறையில் தாமதப்படுத்தும். மனிதாபிமான அடிப்படையில், பிப்ரவரி 15-ல் இருந்து கால அவகாசத்தை நீட்டித்து, வரும் 28.02.2026-க்குள் கடைகளை முழுமையாகக் காலி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனா்.

இதனால் வரும் சனிக்கிழமை வரையே பேருந்து நிலையம் செயல்படும். அதன் பின்னா் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பதால் தற்காலிக பேருந்து நிறுத்தம் தோ்வு செய்யும் பணியில் பேரூராட்சித் தலைவா்(பொ) ஜான்ரவி, செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், அதிகாரிகள் புதன்கிழமை ஈடுபட்டனா். கிழக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஸ்டேட் வங்கி முன்பாக இருந்தும், மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் கனரா வங்கி முன்பாக இருந்தும் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

அந்த இடங்களில் அடிப்படை தேவைகளான குடிநீா், கழிப்பறை வசதி, மின்விளக்கு, பயணிகள் நிற்பதற்கான நிழற்குடை ஆகியவை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.