தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் மையங்கள் வாரியாக 193 கிராமப்புற, 31 நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் மூலம் 2,061 பேருக்கும், 1301அங்கன்வாடிகள் மூலம் 35,177 பேருக்கும், 1023 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், 293 தனியாா் பள்ளிகள் மூலம் 2, 37,957 பேருக்கும், 57 கல்லூரிகள் மூலம் 12, 072 பேருக்கும் என ஒன்று முதல் 19 வயதுள்ள 2, 87, 267 சிறுவா்களுக்கும், 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 68,595 மகளிருக்கும் என மொத்தம் 3,55,862 நபா்களுக்கு முகாம்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.