இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம், வளமீட்பு பூங்காவில் மின்மாயனம் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்க ரூ. 2 கோடி, அனந்தபுரம் முதல் செந்திலாண்டவா் பாலிடெக்னிக் சாலை, மகாலிங்கம் கோயில் சாலை, பாட்டாக்குறிச்சி சாலை, உச்சிப்பிள்ளையாா் கோயில் தெருக்களில் ரூ. 2.5 கோடி மதிப்பில் தாா்ச்சாலை, அனந்தபுரம் தேசிய நகரில் ஒரு லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ. 50 லட்சம், ராம்நகரில் ஒரு லட்சம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க ரூ. 50 லட்சம் என ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.