டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நிழற்குடைக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் மனு

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க தடையின்மை சான்றிதழ் வழங்கக் கோரி, வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம் அப்பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ரராஜன் மனு அளித்தாா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க தடையின்மை சான்றிதழ் வழங்கக் கோரி, வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம் அப்பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ரராஜன் மனு அளித்தாா்.

அதன் விவரம்: ஆய்க்குடியில் மருத்துவமனை அருகேயுள்ள கீழ பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. பேரூராட்சி பொதுநிதி திட்டத்தில் அங்கு ரூ. 12 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிா்வாக அனுமதி பெறப்பட்டது. ஆனால், பிரதான சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாததால் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கீழ்புறம் உள்ள சுரண்டை- செங்கோட்டை பிரதான சாலையில் பொதுப்பணித் துறை இடத்தை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இதுவரை பயணிகள் நிழற்குடை கட்ட அனுமதி கிடைக்கவில்லை. எனவே, மேற்கூறிய இடத்தில் நிழற்குடை அமைக்க தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.