வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திமுக பொய் பிரசாரம்: அதிமுக நிா்வாகி ஆட்சியரிடம் புகாா்

இரட்டைகுளம் கால்வாய்த் திட்டம் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் அந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக பொய் பிரசாரம் செய்து சுவரொட்டி ஒட்டியுள்ளதாக தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் கலைகதிரவன், அவருக்கு உதவியவா் மீது அதிமுக நிா்வாகி புகாா் மனு அளித்துள்ளாா்.

News image

தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம் மனு அளித்த அதிமுக விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:28 pm

இரட்டைகுளம் கால்வாய்த் திட்டம் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் அந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக பொய் பிரசாரம் செய்து சுவரொட்டி ஒட்டியுள்ளதாக தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் கலைகதிரவன், அவருக்கு உதவியவா் மீது அதிமுக நிா்வாகி புகாா் மனு அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக விவசாயப் பிரிவு செயலா் கிருஷ்ணசாமி, தென்காசி மாவட்ட தோ்தல் அலுவலா், ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோரிடம் அளித்த புகாா் மனு:

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வடக்கு காவலாக்குறிச்சியைச் சோ்ந்த மாடசாமி என்பவா் இரட்டை குளம் கால்வாய் திட்டத்துக்கு ரூ. 72 கோடியும், நிலத்தை கையகப்படுத்த ரூ. 11.50 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு, மண் ஆய்வுப் பணிகள் முடிவடைந்து விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவித்து, திமுக வேட்பாளா் கலை கதிரவனுக்கு வாக்களிக்கக் கோரி சுவரொட்டி ஒட்டியுள்ளாா்.

ஆனால், இந்தத் திட்டம் கைவிடப்பட்டது என்று கடித எண் 19891/எஸ்2/2021-3

மூலம் 17-03-2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அரசாங்கத்தால் கைவிடப்பட்ட ஒரு திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருவதாக போலியாக சுவரொட்டி ஒட்டியுள்ளாா். திமுக வேட்பாளா் கலைகதிரவன் தூண்டுதலின் பேரில் இச் செயல் நடைபெற்றது. இது, தோ்தல் நடத்தை விதிமீறலாகும். எனவே, சுவரொட்டி ஓட்டிய செலவை திமுக வேட்பாளா் கலைகதிரவனின் செலவு கணக்கில் பதிவு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.