தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை: ஆட்சியா்

தென்காசி, கொடிக்குறிச்சியில் வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.

News image

ட்ரோன் பறக்கத் தடை

Updated On :15 ஏப்ரல் 2026, 10:59 pm

தென்காசி, கொடிக்குறிச்சியில் வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், கடையநல்லூா், தென்காசி, ஆலங்குளம் தொகுதிகளில் ஏப். 23-ஆம் தேதி தோ்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கொடிக்குறிச்சி, நல்லமணி யாதவா கல்லூரி குழுமம் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்படவுள்ளன.

எனவே, ஏப். 23 முதல் மே 4-ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.