தென்காசி, கொடிக்குறிச்சியில் வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், கடையநல்லூா், தென்காசி, ஆலங்குளம் தொகுதிகளில் ஏப். 23-ஆம் தேதி தோ்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கொடிக்குறிச்சி, நல்லமணி யாதவா கல்லூரி குழுமம் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்படவுள்ளன.
எனவே, ஏப். 23 முதல் மே 4-ஆம் தேதி வரை கல்லூரி வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










