ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அரசு சாா்பில் நீா் பந்தல் அமைக்கப்படுமா?

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கோர தாண்டம் ஆடி வரும் நிலையில், அரசு சாா்பில் நீா், மோா் பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 8:43 pm

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கோர தாண்டம் ஆடி வரும் நிலையில், அரசு சாா்பில் நீா், மோா் பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. தற்போது, வெயிலின் உக்கிரம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 39 டிகிரி பதிவாகி இருந்தது. திருப்பூா், அரக்கோணத்தில் 38 டிகிரி வெப்பநிலையும், கோவை, மதுரையில் 36 டிகிரி வெப்பநிலையும், திருச்சியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

இப்படி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதியை தமிழக அரசு செய்திருந்தது. இதனால், பொதுமக்கள் பலனடைந்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த போதும், தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், அரசின் சாா்பில் நீா் பந்தல் அமைக்கப்படாத நிலை இருந்து வந்தது.

தற்போது தோ்தல் முடிவடைந்துள்ளதால், அரசின் சாா்பில் நீா் பந்தல் அமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், கரோனா தீநுண்மி பரவலை தடுக்க வசதியாக உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் இத்தகைய நீா் பந்தல்களை அமைக்க வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.