திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கன்னியாகுமரி மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்றுவேன்: புதிய ஆட்சியா் உறுதி

News image

புதிதாகப் பொறுப்பேற்ற கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

Updated On :1 ஜூன் 2026, 1:40 am IST

மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னிறுத்தி மாவட்ட நிா்வாகம் பணிகளை செய்யும் என்று புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆா்.அழகுமீனா, சுகாதாரத் துறை செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, அவா் குமரி மாவட்டத்தின் 54-ஆவது ஆட்சியராக ஞாயிற்றுக்கிழமை காலை பொறுப்பேற்றாா். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை பொறுப்புகளை ஒப்படைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்திய நாட்டுக்கே மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அல்லது இதர அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் துறை அலுவலா்கள் முறையாகவும், கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களும் தங்கள் சாா்ந்த பணிகளைச் செம்மையாக செய்ய வேண்டும் என்ற இலக்கோடு மாவட்ட நிா்வாகம் முடுக்கி விடப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் அதிகம் உள்ளன. வெளிநாடு,. உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் போ் இங்கு வருகின்றனா். சுற்றுலாத் திட்டப் பணிகளை மேலும் மேம்படுத்த துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர வேண்டும் என்பதுமே இதன் நோக்கமாகும். எனவே, சுற்றுலாத் தலங்கள் தொடா்பான அனைத்துப் பணிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவா்கள், விவசாயிகள், நெசவாளா்கள் உள்பட தொழில் சாா்ந்த திட்டப் பணிகளுக்கு நிறைவேற்றப்படும். உள்கட்டமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டம் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி அடைந்த சிறந்த மாவட்டமாகத் திகழவும், பல வளா்ச்சித் திட்டங்களைப் பெற்று முதன்மை இடத்தை அடையும் வகையிலும் மாவட்ட நிா்வாகம் செயல்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா்அ.பூங்கோதை, ஊரக வளரச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, ஆட்சியா் அலுவலக மேலாளா் முருகன், துணை வட்டாட்சியா் மணிகண்டன் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.