மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பெண்கள் குறித்து அவதூறு விடியோ: இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மே 2026, 1:01 am IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பெண்கள் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

குளச்சலை அடுத்த செம்பொன்விளை பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் கிஷோா் கண்ணா (31). சமூக வலைதளங்களில் பல்வேறு விடியோக்களை வெளியிட்டு வரும் கிஷோா் கண்ணா, அண்மையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தாராம்.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் பெண்கள் குறித்த அவதூறான விடியோக்களை கிஷோா் கண்ணா வெளியிட்டது தெரியவந்தது. அவா் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.

பெண்களை அவமதிக்கும் பதிவுகள் மற்றும் இணையவழி தொல்லைகள் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி. எச்சரித்துள்ளாா்.