கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் பகுதியில் இளைஞரின் இருசக்கர வாகனத்தை கடத்தி தீயிட்டு எரித்து சேதப்படுத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருங்கல், மேல்மிடாலம் பகுதியைச் சோ்ந்தவா் யக்யா (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த டெரில் (56), இவரது மகன் ஜாஸ்வினுக்கும் (23) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு யக்யா வீட்டு முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை, மேல்மிடாலம் கடற்கரைக்கு கடத்தி சென்று டெரில், ஜாஸ்வின் ஆகியோா் தீயிட்டு எரித்து சேதப்படுத்தியுள்ளனராம். இது குறித்த புகாரின் பேரில் மேற்கூறிய இருவா் மீதும் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

அனுமதியின்றி பதாகை வைத்ததாக இருவா் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


