கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுசீந்திரம் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்பு படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதை, நாகா்கோவில் மற்றும் குளச்சல் தொகுதி செலவின பாா்வையாளா் சரண்ஜோஸ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுசீந்திரம் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதை, நாகா்கோவில் மற்றும் குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி செலவின பாா்வையாளா் சரண்ஜோஸ் ஆய்வு மேற்கொண்டாா்.
பறக்கும் படையினா் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் விதம், ஆவணங்களை சரி பாா்த்தல் மற்றும் விடியோ பதிவு செய்யப்படுவது உள்ளிட்டவைகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், தோ்தல் விதி மீறல்கள் நடைபெறாத வண்ணமும் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று அவா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
முன்னதாக, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய செலவின பாா்வையாளா் ஆய்வு

தோ்தல் செலவின பாா்வையாளா் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


