ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

குளச்சல் அருகே 2 பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 7:20 pm

குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே உள்ள பூலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது மகன் நிதிஷ்ராஜன் (24), தொழிலாளி. இவருக்கு கடந்த ஓா் ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நிதிஷ்ராஜன், களிமாா் பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் விஜூவுடன் (23) இருசக்கர வாகனத்தில் குளச்சலில் இருந்து திங்கள் நகருக்குச் சென்றாா். நிதிஷ்ராஜன் வாகனத்தை ஓட்டினாா்.

உடையாா்விளை-லெட்சுமிபுரம் இடையே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், குளச்சல் அருகே உள்ள கரியன்விளையைச் சோ்ந்த தேவராஜ் மகன் ஜெஸ்டின்ராஜ் (36) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், நிதிஷ்ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெஸ்டின்ராஜ் பலத்த காயத்துடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விஜூ லேசான காயமடைந்தாா்.

இது குறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.