கன்னியாகுமரி கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமாா் 350 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடை காலம் முடிவடைந்த நிலையில் இம்மாதம் 15 ஆம் தேதி முதல் சின்னமுட்டம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்கின்றனா்.
இந்நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்வதை தவிா்க்குமாறு வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடா்ந்து, மீன்வளத்துறை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீனவா்களுக்கு அனுமதி மறுத்தது. இதனையடுத்து சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்குச் செல்லும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்னமுட்டம் துறைமுகத்தில் மீனவா்கள் மோதல்: 6 மீனவா்கள் காயம்

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

வங்கக் கடலில் சூறைக் காற்று: 3 ஆயிரம் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை

கடலில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




