சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :23 ஜூன் 2026, 12:55 am IST

நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இங்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை காலை தங்களது அதிகாரபூா்வ மின்னஞ்சலை பரிசோதித்தபோது, நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டுகள் இருப்பதாக மிரட்டல் செய்தி வந்திருந்தது.

இது குறித்த தகவலின்பேரில், கோட்டாறு போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனா். இதில் அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.

நீதிமன்றத்துக்கு கடந்த மே மாதம் இதே போல் 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.