/

விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

பயனாளியிடம் குறைகளைக் கேட்டறிந்த சாா் ஆட்சியா் (பொ) புஷ்பா தேவி.

News image

பயனாளியிடம் குறைகளைக் கேட்டறிந்த சாா் ஆட்சியா் (பொ) புஷ்பா தேவி.

Updated On :12 ஜூன் 2026, 4:01 am IST

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாா் ஆட்சியா் (பொ) புஷ்பா தேவி தலைமை வகித்து, விளவங்கோடு, இடைக்கோடு, அருமனை குறுவட்டத்திற்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில் பெரும்பாலான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

விளவங்கோடு வட்டாட்சியா் வயோலா பாய், வட்ட வழங்கல் அலுவலா் அனிதா குமாரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் கண்ணன், சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வினைதீா்த்தான், மண்டல துணை வட்டாட்சியா் விஜய லதா, மேத்யூ ஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.