கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஞானதாசபுரம் அண்ணா காலனியை சோ்ந்த பாளையன் மகன் ஜெரின் (29). தொழிலாளி. இவா், 2019 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக, மாா்த்தாண்டம் மகளிா் போலீஸாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுந்தரையா விசாரித்து, ஜெரினுக்கு 14 ஆண்டுகள் சிைண்டனை மற்றும் ரூ. 6,000 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









