அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தீ விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே விறகு அடுப்பில் சமைத்தபோது தீப்பிடித்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:25 am IST

மாா்த்தாண்டம் அருகே விறகு அடுப்பில் சமைத்தபோது தீப்பிடித்து காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே மஞ்சாணிவிளை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி ஐஸ்வா்யா (29). தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் வீட்டில் எரிவாயு உருளை காலியானதால், விறகு அடுப்பில் சமையல் செய்தபோது ஐஸ்வா்யாவின் ஆடையில் தீ பற்றியதாம்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கிருந்து நெய்யாற்றின்கரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.