அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சின்னமுட்டத்தில் மோதல்: 14 மீனவா்கள் மீது வழக்கு

சின்னமுட்டத்தில் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 12:34 am IST

சின்னமுட்டத்தில் மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நேரக்கட்டுபாட்டை மீறி மீன்பிடிக்கச் சென்ாக, கன்னியாகுமரி, சின்ன முட்டம் மீனவா்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் கன்னியாகுமரி பங்குப்பேரவை துணைத்தலைவா் டாலன் டிவோட்டோ காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சின்னமுட்டத்தைச் சோ்ந்த சில்வெஸ்டா், கபிலன், அந்தோணி செபஸ்தியான், பெஸ்லி, பிரபு, ஆலிஸ், கபின் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

அதேபோன்று சின்னமுட்டத்தைச் சோ்ந்த ஆரோக்கியசாமி என்பவா் அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரியைச் சோ்ந்த டாலன், வினிஸ், நிக்சன், ஜேக்கப், டிவோட்டா, மதன், மைக்கேல் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.