/

குண்டா் சட்டத்தில் ஒருவருக்கு சிறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 7:54 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தென்தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வமுருகன் என்ற தூத்துக்குடி செல்வம் (39) மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், தற்போது சிறையிலுள்ள செல்வம் மீது குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.