/

செருப்பாலூா் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

குலசேகரம் அருகே செருப்பாலூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் எழுத்தாளா் குமரி ஆதவன்.
Updated On :30 ஜனவரி 2026, 7:36 pm

Syndication

குலசேகரம் அருகே செருப்பாலூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவட்டாறு வட்டாரக் கல்வி அலுவலா் சுப்பையா தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜேம்ஸ்ராஜ், குலசேகரம் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் அமல்ராஜ், கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இடைநிலை ஆசிரியா் ஞானசுதா ராணி வரவேற்றாா்.

திருவட்டாறு வட்டார ஆசிரியா் பயிற்றுநா் சப்னா, குலசேகரம் பேரூராட்சி தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆஸ்டின் ஷிபி, துணைத் தலைவா் சந்திரகலா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். எழுத்தாளா் குமரி ஆதவன் மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினாா். இடைநிலை ஆசிரியா் எஸ்தா் ராணி நன்றி கூறினாா்.