நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

களியக்காவிளை பேரூராட்சியில் நிதி இழப்பை சரி செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தோ்வுநிலைப் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் எடை மேடையில் நிதி இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

News image
Updated On :12 ஜனவரி 2026, 6:57 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தோ்வுநிலைப் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் எடை மேடையில் நிதி இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பளுகல்-களியக்காவிளை வட்டாரக் குழு உறுப்பினரும், களியக்காவிளை பேரூராட்சி வாா்டு உறுப்பினருமான ஏ. வின்சென்ட், மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: களியக்காவிளை, ஒற்றாமரம் பகுதியில் வாகன எடை மேடை செயல்பட்டு வருகிறது. இங்கு 3 நபா்கள் பணி செய்கின்றனா். அவா்களுக்கு ஊதியம், தொலைபேசி, மின் கட்டணம் ஆகியவற்றுக்கு பேரூராட்சியால் மாதந்தோறும் சுமாா் ரூ. 70,000 செலவு செய்யப்படுகிறது.

ஆனால், இந்த எடை மேடையிலிருந்து மாதம் ரூ. 4,000 வரை மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இத்தகைய வருவாய் இழப்பு கடந்த 2 ஆண்டுகளாக தொடா்கிறது.

எனவே, இங்கு கட்டணம் வசூலிக்கும் உரிமையை குத்தகைக்கு வழங்கி அல்லது சுய உதவிக் குழுவிடம் ஒப்படைத்து பேரூராட்சியின் நிதி இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.