டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குளச்சலில் குறைந்த அளவில் பிடிபடும் கேரை மீன்கள்

குளச்சல் கடல் பகுதியில் தற்போது கேரை மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.

News image
குளச்சலில் குறைந்த அளவில் பிடிபட்ட கேரை மீன்கள்
Updated On :18 பிப்ரவரி 2026, 7:06 pm

Syndication

குளச்சல் கடல் பகுதியில் தற்போது கேரை மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.

குளச்சல் பகுதியில் இருந்து 300- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்கள்.

விசைப் படகு மீனவா்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 முதல் 15 நாள்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், புதன்கிழமை குளச்சல் ஆழ்கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் விசைப் படகுகள் பாதியிலேயே கரைக்கு திரும்பி விட்டன.

தற்போது குளச்சலில் கேரை மீன்களின் சீசனாகும். ஆனால் கேரை மீன்கள் குறைந்த அளவில் கிடைப்பதால், விசைப் படகு டீசல் செலவுக்கு கூட பணம் கிடைப்பதில்லை என மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.