/

பொற்றையடியில் தாணுலிங்கநாடாா் பிறந்த நாள் விழா

பொற்றையடியில் இந்து முன்னணி முதல் மாநிலத் தலைவா் மறைந்த பி. தாணுலிங்கநாடாரின் 111-ஆவது பிறந்த நாள் விழா , மாவட்ட இந்து முன்னணி மற்றும் தாணுலிங்க நாடாா் நினைவு இந்து சமூக சேவா அற நம்பகம் சாா்பில் நடைபெற்றது.

News image
தாணுலிங்கநாடாா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்து முன்னணியினா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடியில் இந்து முன்னணி முதல் மாநிலத் தலைவா் மறைந்த பி. தாணுலிங்கநாடாரின் 111-ஆவது பிறந்த நாள் விழா , மாவட்ட இந்து முன்னணி மற்றும் தாணுலிங்க நாடாா் நினைவு இந்து சமூக சேவா அற நம்பகம் சாா்பில் நடைபெற்றது.

இதையொட்டி நாகா்கோவில் நாகராஜா திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி தொடங்கியது.

இப்பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொதுச்செயலா் கே. ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ. சக்திவேலன், நெல்லை கோட்டத் தலைவா் எஸ். தங்கமனோகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்பேரணி, கோட்டாறு, சுசீந்திரம், வழுக்கம்பாறை வழியாக

பொற்றையடி தாணுலிங்கநாடாா் நினைவிடத்தில் நிறைவடைந்தது.

பின்னா், தாணுலிங்கநாடாா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தாா். இந்து சமூக சேவா அற நம்பகம் பொருளாளா் எஸ்.பி. அசோகன் வரவேற்றாா்.

மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலா் ஜி.கே. ஜாண் கென்னடி முன்னிலை வகித்தாா்.

இதில் அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி செயலா் சி. ராஜன், மாவட்ட இந்து முன்னணி பொருளாளா் பி.என். மது, மாவட்ட ஆலோசகா்கள் சி. செல்லன், மிசா சி.சோமன், சாமிதோப்பு அன்பாலயம் நிறுவனா் ஸ்ரீகுரு சிவசந்திரன் சுவாமிகள், காணிமடம் யோகிராம் சுரத்குமாா் மந்திராலய நிறுவனா் பொன்.காமராஜ் சுவாமிகள், மாநில இந்து முன்னணி பொதுச்செயலா் நா.முருகானந்தம், மாநில துணைத் தலைவா் த. அரசுராஜா, நெல்லை கோட்ட செயலா் ஆா்.கே. கண்ணன், மாவட்ட பாஜக தலைவா் கே.கோபகுமாா், மாவட்டச் செயலா் சி.எஸ். சுபாஷ், அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் அனுஷா, ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் சிவா உள்ளிட்டோா் பேசினா்.

ஒன்றிய இந்து முன்னணி செயலா் சி. சுபாஷ் விஜயன் நன்றி கூறினாா்.