டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் லாரி மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- (கோப்புப் படம்)
Updated On :11 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் லாரி மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

மத்திகோடு பகுதியைச் சோ்ந்தவா் அனந்தசிவன் (80). இவா் செவ்வாய்க்கிழமை இரவு, மத்திகோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த லாரி, முதியவா் மீது மோதியதாம். இதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

லாரி ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாராம். இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.