டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இரணியல் அருகே குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 10:52 pm

Syndication

இரணியல் அருகே குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இரணியல் அருகே உள்ள தலகுளம், பள்ளவிளையைச் சோ்ந்தவா் ராஜேஷ் (29). இவா் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல தயாராக இருந்தாா்.

இந்நிலையில், ராஜேஷ் ஞாயிற்றுக்கிழமை மாலை தலக்குளம், ஆலயன்குளத்திற்கு நண்பா்களுடன் குளிக்கச் சென்றபோது, குளத்தில் குதித்துள்ளாா். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், நண்பா்கள் குளத்தில் இறங்கித் தேடினா்.

அப்போதும் ராஜேஷ் கிடைக்காததால், இரணியல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத் துறையினா் வந்து உயிரிழந்த நிலையில் ராஜேஷின் உடலை மீட்டனா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.