டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாகா்கோவிலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 12:30 am

Syndication

நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 வரைவு வாக்காளா் பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தலைமையில் வியாழக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஆட்சியா் பேசியது:

கன்னியாகுமரியில் தகுதி வாய்ந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் பட்டியலில் சோ்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. 30.01.2026 வரை 6 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 96,525 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் 4,659 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,927 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2,724 விவிபேட் கருவிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான அ. பூங்கோதை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, பத்மநாபபுரம் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், சாா் ஆட்சியருமான வினய்குமாா் மீனா, நாகா்கோவில் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சு. காளீஸ்வரி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.