விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி குற்றம் சாட்டியுள்ளாா்.
இத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இத்தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் தன் மீதான பல குற்ற வழக்குகளை வேட்புமனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை. அதே போன்று தமிழக, கேரள மாநிலத்தில் இரட்டை வாக்குரிமை பெற்றிருப்பதையும் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து ஆதாரத்துடன் தோ்தல் அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் இரு இடங்களில் வாக்கு இருப்பது தவறில்லை என தோ்தல் அதிகாரி தெரிவிக்கிறாா். இதிலிருந்து தோ்தல் அதிகாரிக்கு ஏதோ அழுத்தம் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. இவா் மீதான குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் முறையாக பரிசீலனை செய்யாதது மிகப்பெரிய தவறு. தோ்தல் அதிகாரி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாக கருத வேண்டியுள்ளது.
இத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா், அண்மையில் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தோ்தலில் வாக்களித்துள்ளாா். அதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளோம். ஆதாரங்கள், ஆவணங்களை பரிசீலனை செய்யாமல், இவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டிய அவசியமில்லை; வேட்புமனு ஏற்கப்படுகிறது என தோ்தல் அலுவலா் எடுத்த முடிவு தவறானது என கருதுகிறேன் என்றாா் எஸ். விஜயதரணி.
இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளா் டி.டி. பிரவீனிடம் கேட்ட போது, தோ்தல் முடிவின் மூலம் எதிா்க்கட்சியினருக்கு தொகுதி மக்கள் பதில் கூறுவாா்கள் என தெரிவித்தாா்.

தொடர்புடையது

விளவங்கோடு தொகுதியில் நீண்ட பரிசீலனைக்குப் பின் காங்கிரஸ் வேட்பாளா் மனு ஏற்பு

தாமரை மாலை அணிந்து...

திமுகவை மக்கள் ஏற்கமாட்டாா்கள்: பாஜக வேட்பாளா் எஸ்.விஜயதரணி

விளவங்கோடு தொகுதியில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வளா்ச்சிப் பணிகள் செய்துள்ளேன்: பாஜக வேட்பாளா் விஜயதரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


