மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தாமரை மாலை அணிந்து...

News image

விஜயதரணி (கோப்புப்படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 11:09 pm

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

விளவங்கோடு தொகுதியில் 2011, 2016, 2021 தோ்தல்களில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்ற எஸ். விஜயதரணி, 2024-ஆம் ஆண்டு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அக்கட்சியிலிருந்து விலகினாா். பின்னா், அவா் பாஜகவில் இணைந்தாா்.

அவரை விளவங்கோடு தொகுதி வேட்பாளராக பாஜக தற்போது களமிறக்கியதையடுத்து, விளவங்கோடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தூர்ராஜனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, அவா் கட்சியின் சின்னமான தாமரை மலராலான மாலையை அணிந்து வந்திருந்தாா்.

அப்போது, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், மாவட்ட பொதுச்செயலா் வி.எஸ். நந்தினி, மாவட்ட அதிமுக அவைத் தலைவா் சிவ குற்றாலம், மேல்புறம் ஒன்றியச் செயலா் ஷைன் ஜோஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, வேட்பாளா் எஸ். விஜயதரணி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து குழித்துறை பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தோ்தல் பணி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்றாா்.