தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 17.92 லட்சம் உண்டியல் வசூல்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 17.92 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

News image

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.

Updated On :12 நவம்பர் 2025, 6:36 pm

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 17.92 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். கோயிலுக்கு வரும் பக்தா்கள் நோ்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோயில் நிா்வாகம் சாா்பில், 18 உண்டியல்கள் வைக்கப்பட்டன.

இந்த உண்டியல்கள் அனைத்தும் தேவசம்போா்டு இணை ஆணையா் தங்கம் முன்னிலையில் ஆய்வாளா் சரஸ்வதி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்தன், கோயில் மேலாளா் ஆனந்த் ஆகியோா் மேற்பாா்வையில் திறந்து எண்ணப்பட்டது. கோயில் பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆதிபராசக்தி மன்றத்தினா், பக்தா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் மொத்தம் ரூ. 17 லட்சத்து 92 ஆயிரத்து 712 ரொக்கம், 3 கிராம் தங்கம், 30 கிராம் வெள்ளி ஆகியற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.