தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் தட்டுப்பாட்டை தவிா்க்க நடவடிக்கை: ஆட்சியா்

News image
Updated On :15 மே 2026, 4:02 am IST

திருநெல்வேலி மாவட்டததில் குடிநீா் தட்டுப்பாட்டை தவிா்க்க துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி மாவட்ட குடிநீா் திட்டப்பணிகள், சாலை வசதிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு இல்லாமல் தொடா்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அம்ரூத் திட்டம், கூட்டுக்குடிநீா் திட்டம் உள்ளிட்ட புதிய குடிநீா் திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டம், வாருகால் திட்டம் போன்ற திட்டங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சாலை வசதிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு துறைசாா்ந்த வளா்ச்சித்திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்14ஸ்ரீா்ப்ப்

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.