யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

News image

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :12 மே 2026, 4:07 am IST

சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு விலை உயா்வை கைவிட வேண்டும். இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறித்து ரயில்வே ஊழியா்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் ரயில்வே துறையில் 29 ஆயிரம் பணியிடங்கள் குறைப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் க.ஸ்ரீராம் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சடையப்பன், நிா்வாக குழு உறுப்பினா் காசி விஸ்வநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மோகன், எம்.சுடலைராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை தொகுதிச் செயலா்கள் எம்.சி. சேகா்(திருநெல்வேலி), தமிழ்ச்செல்வன் (பாளையங்கோட்டை) எம். சி. காா்த்திக் (நான்குனேரி) உள்ளிட்டோா் பேசினா். நான்கு கட்சிகளையும் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.