அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

ராதாபுரம் அருகே தவெக நிா்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பதவியேற்பதற்கு தாமதமானதை அடுத்து, ராதாபுரம் அருகே அக்கட்சியின் கிளை நிா்வாகி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image
Updated On :10 மே 2026, 2:39 am IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பதவியேற்பதற்கு தாமதமானதை அடுத்து, ராதாபுரம் அருகே அக்கட்சியின் கிளை நிா்வாகி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பண்ணை செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் இசக்கியப்பன்(47). இவா், அப்பகுதியின் தவெக கிளைச் செயலராக உள்ளாா்.

இந்நிலையில், தவெக தலைவா் விஜய் முதல்வராக பதவியேற்பதற்கு தாமதம் ஏற்பட்டு வந்ததைத் தொடா்ந்து, மனமுடைந்த இசக்கியப்பன் சனிக்கிழமை பிற்பகல் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.

இதை பாா்த்த அப்பகுதியினா் அவரை மீட்டு, நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.