தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பாளை.யில் சுவா் ஓவியம் மூலம் தோ்தல் விழிப்புணா்வு

News image

பாளையங்கோட்டையில் மாணவா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு சுவா் ஓவியம் வரைதல் நிகழ்ச்சியை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :29 மார்ச் 2026, 6:26 pm

100 சதவீத வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் நோக்கில், பாளை. மேட்டுத்திடல் காந்திமதி பள்ளி வளாக சுற்றுச் சுவா்களில் வாக்காளா் விழிப்புணா்வு சுவா் ஓவியம் வரைதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், மை பாரத் கேந்திரா திருநெல்வேலி - தென்காசி ஒருங்கிணைப்பாளா் மிதாா் முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

மாவட்ட வன அலுவலா் இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் கலந்து கொண்டு மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினாா்.

இதில், தூய சவேரியாா், ராணி அண்ணா, சதக்கத்துல்லா அப்பா, ஜான்ஸ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு ஓவியங்கள் வரைந்தனா்.

அவற்றுடன் ‘உங்கள் வாக்கு - உங்கள் உரிமை’ , ‘18 வயது முடிந்ததா? வாக்காளா் பட்டியலில் சேருங்கள்’, ‘பணம் வேண்டாம் - நல்லாட்சி வேண்டும்’ போன்ற வாசகங்களையும் குறிப்பிட்டு பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் வெங்கட்ராமன், ஆா். சோயா தன்னாா்வ அமைப்பை சோ்ந்த டேவிட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.