மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிருஷ்ணாபுரத்தில் 8 பவுன் நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:47 pm

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் வீடுபுகுந்து 8 பவுன் நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

கிருஷ்ணாபுரம் கலைக்கோவில் நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா், தற்போது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளாா். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அப் பகுதி மக்கள் கிருஷ்ணனுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அவரது சகோதரரான பெருமாள்புரத்தில் வசிக்கும் சங்கா், கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் தங்கநகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தனவாம்.

இதேபோல, தனியாா் நிறுவன ஊழியரான கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரை சோ்ந்தவா் ரகு (38) என்பவா், தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கையும் மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இச்சம்பவங்கள் குறித்தும் சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.